சுபஸ்ரீ மரணம்: பேனர் வைத்த ஜெயகோபாலுக்கு போலீசார் வலைவீச்சு!

 

சுபஸ்ரீ  மரணம்: பேனர் வைத்த ஜெயகோபாலுக்கு போலீசார் வலைவீச்சு!

பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இன்னும் கைது செய்யப் படாத நிலையில், ஆளும் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பதால் அவர் இன்னும் கைது செய்யப் படவில்லை என்ற மக்கள் மத்தியில் பரவலாக கருத்துகள் எழுந்துள்ளன

பேனர் தவறி விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில், பேனருக்குத் தடை விதித்தும் விபத்துக்குக் காரணமானவர்களை கைது செய்யவும் கூறி நீதி மன்றம் உத்தரவிட்டது. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இன்னும் கைது செய்யப் படாத நிலையில், ஆளும் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பதால் அவர் இன்னும் கைது செய்யப் படவில்லை என்ற மக்கள் மத்தியில் பரவலாக கருத்துகள் எழுந்துள்ளன. 

Subasree

இதனால், தனிப்படை காவல்துறையினர் ஜெயகோபாலை கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன் படி, தனிப்படை காவல் துறை இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஜெயகோபாலை தேடி வருகின்றனர். ஒரு பிரிவு ஜெயகோபால் வீட்டில் யாரும் இல்லாததால் அவரின் வீட்டு வாசலில், ஜெயகோபாலை காவலில் சரணடையும் படி நோட்டீஸ் ஒட்டியும், அவரது உறவினர்களின் தொலைப்பேசி எண்ணை தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். 

மற்றொரு தனிப்படை பிரிவு, திருச்சி மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் ஜெயகோபால் தலைமறைவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அப்பகுதிகளில் தேடி வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.