சுபஸ்ரீ இறப்புக்கு காரணமான ஜெயகோபால் கைது!

 

சுபஸ்ரீ இறப்புக்கு காரணமான ஜெயகோபால் கைது!

சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த  முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த  முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, பள்ளிக்கரணை அருகே பேனர் தவறி விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த இழப்பையடுத்து உயர் நீதி மன்றம் பேனர் வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.

subhasri

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கடந்த 14 ஆம் தேதி  அ.தி.மு.க கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஜெய்கோபால் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் தலையீட்டை அடுத்து தேடுதல் வேட்டையில் தனிப்படை காவல்துறையினர் ஈடுபட்டது. தேன்கனிக்கோட்டையில் சொகுசு விடுதியில் ஓய்வு எடுத்துவந்த ஜெயகோபாலை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மாநகராட்சியின் ஒப்புதலின்று பேனர் வைத்தல், மரணம் விளைத்தல் உள்ளிட்ட குற்றங்களை விவரிக்கும் சட்டப்பிரிவு 308 கீழ் அவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.