சுனாமியே வந்தாலும் முடியாது: ஓபிஎஸ் அதிரடி

 

சுனாமியே வந்தாலும் முடியாது: ஓபிஎஸ் அதிரடி

சுனாமியே வந்தாலும் என்னையும் முதல்வர் பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை: சுனாமியே வந்தாலும் என்னையும் முதல்வர் பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே மன வருத்தம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த சூழலில் டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததாக தினகரன் தரப்பினர் கூறியதை அடுத்து முதல்வர் பழனிசாமிக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும் இடையே இருந்த மன வருத்தமானது வலுப்பெற்றுவிட்டது தமிழக அரசியலில் இனி புதுக்காட்சிகள் அரங்கேறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் அதிமுக நிர்வாகியின் திருமணவிழா நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும் நானும் இணைந்து ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறோம்.எங்களை பிரிப்பதற்கு எதிர்க்கட்சியினர் கங்கணம் கட்டி இருக்கிறார்கள். அவர்களது சதியை நாங்கள் முறியடித்து இருக்கிறோம். எங்களை ஆட்டவோ அசைக்கவோ முடியாது. என்னையும், முதல்வரையும் சுனாமி வந்தாலும் பிரிக்க முடியாது என்றார்.