சுதந்திர தினவிழாவில் நடிகர் விவேக் செய்த காரியம் இதுதான் : குவியும் பாராட்டு!
நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் விவேக் அம்பத்தூர் பகுதியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்.
சென்னை: நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் விவேக் அம்பத்தூர் பகுதியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்.
நடிகர் விவேக் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாது அதன் வாயிலாகவே சமூகத்துக்குத் தேவையான பல நல்ல கருத்துக்களையும் கூறி வருகிறார். அதே போல் களப்பணியிலும் ஈடுபட்டு வரும் விவேக், மாணவர்களையும் இதே போல் செயல்பட ஊக்குவித்து வருகிறார்.
இந்நிலையில் நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதைச் சிறப்பிக்கும் வகையில், அம்பத்தூரில் அமைந்துள்ள பெரும் தலைவர் காமராஜ் பெண்கள் அரசு பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவேக், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு தொடக்கவிழாவில் கலந்து கொண்டு மரங்களை நட்டு வைத்து மாணவிகள் மத்தியில் உற்சாகமாக உரையாடினார்.
அம்பத்தூர், ஒரகடம், தாமரைக்குளத்தை JCB மூலம் தூர் வாரி ஆரம்பித்து வைத்து கரையில் மரங்களும் நட்டோம். அம்பத்தூர் நீர் நிலைப் பாதுகாப்பு அமைப்புக்கு நன்றி. pic.twitter.com/sWosILAKKl
— Vivekh actor (@Actor_Vivek) August 15, 2019
அதோடு கிரீன் கலாம் மற்றும் அம்பத்தூர் நீர் நிலைப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்ட அவர், அம்பத்தூர், ஒரகடம், தாமரைக்குளத்தை ஜேசிபி மூலம் தூர் வாரி ஆரம்பித்து வைத்து கரையில் மரங்களையும் நாட்டார். இந்த புகைப்படங்களை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விவேக்கின் இந்த டிவீட்-க்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.