சுதந்திர தினத்தில் கருப்புக்கொடி ஏற்றிய ஆதி திராவிட மக்கள்! தமிழகத்தில் பரபரப்பு

 

சுதந்திர தினத்தில் கருப்புக்கொடி ஏற்றிய ஆதி திராவிட மக்கள்! தமிழகத்தில் பரபரப்பு

நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், வேதாரண்யம் அருகே உள்ள கள்ளிமேட்டில் பட்டியலின மக்கள் கருப்புக் கொடியேற்றி தங்களது எதிர்ப்பைக் காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கள்ளிமேட்டில் மிகவும் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது.

சுதந்திர தினத்தில் கருப்புக்கொடி ஏற்றிய ஆதி திராவிட மக்கள்! தமிழகத்தில் பரபரப்பு

நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், வேதாரண்யம் அருகே உள்ள கள்ளிமேட்டில் பட்டியலின மக்கள் கருப்புக் கொடியேற்றி தங்களது எதிர்ப்பைக் காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கள்ளிமேட்டில் மிகவும் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இந்த காளியம்மன் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சமுதாய மக்களும் உபயதாரர்களாகவும், மண்டகப்படி செய்பவர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.

நாளடைவில் இந்த முறைகள் மாற்றப்பட்டு ஆதிதிராவிட மக்களுக்கான உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, ஆதிதிராவிடர் சமுதாய மக்களின் மண்டகப்படி செய்யும் உரிமை பறிக்கப்பட்டு , அவர்களின் தெருக்களில் சாமி ஊர்வலம் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
பலகட்டங்களாக இந்த செயலை எதிர்த்து ஆதிதிராவிட மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். பல்வேறு கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது உரிமைகளை கேட்டும், பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் விரக்தியடைந்த மக்கள்,

vendharanyam

சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் வகையில், அவர்களின் வீடுகள் தோறும் கருப்புக் கொடியை ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இச்செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சுதந்திர திருநாளில் ஆதிதிராவிட மக்கள், கிராமத்தில் கருப்புக் கொடி ஏற்றி தங்கள் உரிமைக்காக போராடி இருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வசிக்கும் பகுதிகளில் இருக்கும் ஆலயத்தில் சுதந்திரமாக நுழைந்து உரிமையப் பெற முடியவில்லை. பிறகு எப்படி நாங்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம் என்று ஆதி திராவிட மக்கள் தங்களது போராட்டங்களைத் தொடர்ந்தனர்.