‘சுதந்திரம்’ நிச்சயம் ஒருநாள் என்னை தேடி வருவான்: கீதா கண்ணீர் பேட்டி!

 

‘சுதந்திரம்’ நிச்சயம் ஒருநாள்  என்னை தேடி வருவான்: கீதா கண்ணீர் பேட்டி!

நான் சுதந்திரத்தை அடிக்கடி பார்க்க செல்வேன். அவனை பார்க்க போகும் போது  துணி,  சாக்லேட்  எல்லாமே  வாங்கிட்டு போவேன். அவனுக்கு என் மேல பாசம் அதிகம். ஆனா அவன  ஒரு குடும்பம் தத்து   எடுத்ததுக்கு  பிறகு அவன என்னால பார்க்க முடியல.

சென்னை:  குழந்தை சுதந்திரம் நிச்சயம் என்னை தேடி வருவான் என்று வளசரவாக்கம் கீதா தெரிவித்துள்ளார். 

suthanthiram

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று  வளசரவாக்கத்திலுள்ள மழைநீர்க் கால்வாயில் குழந்தை ஒன்று உயிரோடு மீட்கப்பட்டது. அந்த குழந்தையை மீட்ட கீதா என்ற பெண்,  குழந்தைக்குச் சுதந்திரம் என்று பெயர் சூட்டினார். குழந்தையைக் காப்பாற்றிய கீதாவுக்கு அரசு பணியும் பாராட்டுகளும் குவிந்தன. 

bbay

பாதிக்கப்பட்ட குழந்தை  எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  பின் அண்ணா நகரில் உள்ள தொட்டில் குழந்தை திட்டத்துக்கு மாற்றப்பட்டது. சட்ட நடைமுறைப்படி  குழந்தை வேறொரு நபருக்கு  தத்து கொடுக்கப்பட்டுவிட்டது. 

bbay

இது குறித்து பிரபல இணையதள ஊடகத்திற்கு கீதா தற்போது பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் நான் சுதந்திரத்தை அடிக்கடி பார்க்க செல்வேன். அவனை பார்க்க போகும் போது  துணி,  சாக்லேட்  எல்லாமே  வாங்கிட்டு போவேன். அவனுக்கு என் மேல பாசம் அதிகம். ஆனா அவன  ஒரு குடும்பம் தத்து   எடுத்ததுக்கு  பிறகு அவன என்னால பார்க்க முடியல. என் பேரன் நல்லா  இருந்தா அதுவே போதும். நிச்சயமா  என்னை  சுதந்திரம் ஒருநாள் தேடி வருவான் ஆனா அப்போ  நான்  உயிரோட  இருப்பேனானு தெரியல’ என்று கண்ணீர்  மல்க கூறியுள்ளார் கீதா.