சுடுகாடுகளும், கல்லறைகளும் மூடப்பட்டால் இஸ்லாமியர்களின் அடக்க ஸ்தலம் திறக்கப்படும்! – எஸ்.டி.பி.ஐ அறிவிப்பு

 

சுடுகாடுகளும், கல்லறைகளும் மூடப்பட்டால் இஸ்லாமியர்களின் அடக்க ஸ்தலம் திறக்கப்படும்! – எஸ்.டி.பி.ஐ அறிவிப்பு

நெல்லூர் மருத்துவர் இறந்தபோது அவரது உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர், திருவேலங்காடு பகுதியில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல், சென்னை டாக்டர் உயிரிழந்த போது அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய சென்றபோது பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்து, கிறிஸ்தவ அடக்க ஸ்தலத்தில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்பு ஏற்பட்டால் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலங்களை பயன்படுத்தலாம் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவித்துள்ளது.
நெல்லூர் மருத்துவர் இறந்தபோது அவரது உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர், திருவேலங்காடு பகுதியில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல், சென்னை டாக்டர் உயிரிழந்த போது அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய சென்றபோது பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

corona-died-tamilnadu-78

பின்னர் அந்த உடலை அண்ணாநகர் திருவேலங்காடு கொண்டு சென்றபோது பொது மக்கள் ஆம்புலன்ஸ் வாகனம், உடன் சென்ற மருத்துவர் உள்ளிட்டவர்களைத் தாக்கினர். 
மக்கள் அறியாமையால் செய்யும் இந்த தவற்றை மத சாயம் பூசி சமூக ஊடகங்களில் பலரும் வதந்தி பரப்பி வருகின்றனர். திருவேலங்காடு, கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தது பொது மக்கள் தானே தவிர எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களோ இல்லை. 
இந்த நிலையில், “இந்துக்களும், கிறிஸ்தவர்களும் கொரோனா தொற்றால் மரணித்துவிட்டால், அவர்களை நல்லடக்கம் செய்ய சுடுகாடுகளும், கல்லறைகளும் மூடப்படுமேயானால், முஸ்லிம்களின் மய்யவாடிகள் திறக்கப்படும்” என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமர் பாரூக் தெரிவித்துள்ளார்.