சுஜித் மரணம் எதிரொலி!  நவீன கருவியை உருவாக்கினால் ரூ.5 லட்சம் பரிசு

 

சுஜித் மரணம் எதிரொலி!  நவீன கருவியை உருவாக்கினால் ரூ.5 லட்சம் பரிசு

தமிழக மக்களை மீள துயரில் ஆழ்த்தி உள்ளது சிறுவன் சுஜித்தின் மரணம். இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை பத்திரமாக மீட்பதற்கு உதவும் வகையில் நவீன கருவியை யாராவது உருவாக்கினால் அவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

sujith

இப்படியொரு கருவியைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு கொடுக்கலாம் என்று முதல்வரின் அலுவலகத்திற்கு பரிந்துரையை  அனுப்பியுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்ப துறை முதன்மை செயலாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.