சுஜித் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல நேரில் செல்கிறார் முதல்வர்..!

 

சுஜித் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல நேரில் செல்கிறார் முதல்வர்..!

நாடு முழுவதும் ‘மீண்டு வா சுஜித்’ எனப் பல மக்கள் பிரார்த்தித்தும் அவர்களின் நம்பிக்கை பொய்யானது.

மணப்பாறை அருகே, நடுக்காட்டுபட்டியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று விளையாடிக் கொண்டிருந்த போது ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் தவறி விழுந்தான். 4 நாட்களாகச் சிறுவனை மீட்கப் போராடிய மீட்புக் குழு, இன்று காலை சுஜித்தின் உடலை அழுகிய நிலையில் மீட்டது. நாடு முழுவதும் ‘மீண்டு வா சுஜித்’ எனப் பல மக்கள் பிரார்த்தித்தும் அவர்களின் நம்பிக்கை பொய்யானது. இன்று காலை ‘சுஜித் இறந்து விட்டான்’ என்ற செய்தி அவனுக்காகப் பிரார்த்தித்த அனைத்து மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியது. 

Funeral

மீட்கப்பட்ட சுஜித்தின் உடல், இன்று காலை மணப்பாறையில் உள்ள மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல தலைவர்கள் சுஜித்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுஜித்தின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல இன்று பிற்பகல் 3:30 மணிக்கு நடுக்காட்டுபட்டிக்குச் செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.