சுஜித்தின் மரணம் வேதனையளிக்கிறது: ரஜினி ட்வீட்!
சுயநலம் பாராமல் இரவு பகலாக உழைத்த அத்தனை நபர்களுக்கும் சுஜித்தின் இழப்பு பேரிழப்பாகும்.
மணப்பாறை: சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான். 5 நாட்கள் தொடர்ந்த இந்த போராட்டம் கடைசியில் தோல்வியில் முடிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சுஜித்தின் உடல் பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. குழந்தையை மீட்கும் இந்த போராட்டத்தில் சுயநலம் பாராமல் இரவு பகலாக உழைத்த அத்தனை நபர்களுக்கும் சுஜித்தின் இழப்பு பேரிழப்பாகும்.
சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
— Rajinikanth (@rajinikanth) October 29, 2019
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், ‘சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்’என்று குறிப்பிட்டுள்ளார்.