சுகாதாரமற்ற உணவால் சரவணபவன் இழப்பீடு வழங்க வேண்டும்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

 

சுகாதாரமற்ற உணவால் சரவணபவன் இழப்பீடு வழங்க வேண்டும்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

சுகாதாரமற்ற உணவால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகச் சரவணபவன் மீது தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சுகாதாரமற்ற உணவால் சரவணபவன் இழப்பீடு வழங்க வேண்டும்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: சுகாதாரமற்ற உணவால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகச் சரவணபவன் மீது தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2014ம் ஆண்டு வழக்கறிஞரான சாமி என்பவர் சென்னை அண்ணாசாலையில் உள்ள சரவணபவன் உணவகத்தில் உணவு உண்டுள்ளார். அப்போது அவர் சாப்பிட்ட உணவில் முடி கிடந்துள்ளது. இதுகுறித்து கிளை மேலாளரிடம் புகார் கூறியதையடுத்து மாற்று உணவு தரப்பட்டது. இருப்பினும் சுகாதாரமற்ற உணவைச் சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன் என்று நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் அதில், சரவணபவன் உணவகம் இழப்பீடாக ரூ.60 லட்சமும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.30 லட்சமும் வழங்க வேண்டுமென்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

judge

இந்த புகாரை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சாமிக்கு ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய்  இழப்பீடு வழங்க வேண்டுமெனச் சரவணபவன் உணவகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.