சுகப்பிரசவம் வேண்டுமா? அப்போ இந்த கீரையை சாப்பிடுங்க..!

 

சுகப்பிரசவம் வேண்டுமா? அப்போ இந்த கீரையை சாப்பிடுங்க..!

மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாத நோயை அகற்றும்  முடக்கற்றான் கீரை சுகப்பிரசவத்திற்கு பெரிதும் உதவுகிறது.

சென்னை: மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாத நோயை அகற்றும்  முடக்கற்றான் கீரை சுகப்பிரசவத்திற்கு பெரிதும் உதவுகிறது.

பெண்களுக்கு பிரசவம் என்பது மறுஜென்மம் எடுப்பது போன்றது. கர்ப்பிணி பெண்கள் காலம்காலமாக வீட்டிலேயே குழந்தை பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்த்து வந்த நிலை மாறிவிட்டது. தற்போதுள்ள கர்ப்பிணி பெண்களின் உணவு முறை, ஊட்டச்சத்து பிரச்னைகளால் சுகப்பிரசவம் என்பது கனவாக இருக்கிறது.

எங்கு பார்த்தாலும் சிசேரியன் தான், பெண்களால் பிரசவ வலியை தாக்குப்பிடிக்க முடிவதில்லை. அவர்களாகவே சிசேரியன் செய்துவிடுங்கள் டாக்டர் என்கின்றனர். இந்த சிசேரியனால் பல்வேறு உடல் உபாதைகள் பின்னாட்களில் ஏற்படும் என்பதை உணர்ந்தே பெண்கள் இதற்கு துணிந்துவிட்டனர்.

mudakathan

சிசேரியனை தவிர்த்து சுகப்பிரசவம் பெற நினைக்கும் பெண்கள், முடக்கத்தான் கீரையை பயன்படுத்தலாம். பிரச்விக்க கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் முடக்கத்தான் கீரையை அரைத்து அடர்த்தியாக பூசிவிட்டால், கால் மணி நேரத்தில் சுகப்பிரசவம் ஏற்படும். இதனால் கஷ்டமோ, களைப்போ பெண்களுக்கு இருக்காது என்பதால், பாட்டிகள் இந்த முறையை தான் பயன்படுத்தியுள்ளனர்.

மாதவிடாய் முறையாக வராத பெண்கள், முடக்கத்தான் கீரையை வதக்கி, அடி வயிற்றில் கட்டி வந்தால் மாதவிடாய் சீராகும். இது தவிர முடக்கத்தான் கீரையை மூட்டி வலிக்கும், வாயு தொல்லைக்கும், மலச்சிக்களுக்கும், முடி உதரும் பிரச்னைக்கும் பயன்படுத்தலாம்.