சுகப்பிரசவத்தின் போது துண்டான குழந்தையின் தலை – கூவத்தூரில் கொடூர சம்பவம்

 

சுகப்பிரசவத்தின் போது துண்டான குழந்தையின் தலை – கூவத்தூரில் கொடூர சம்பவம்

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டாகிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டாகிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பிரசவம் பார்த்த செவிலியர்கள் 

மருத்துவர்கள் யாரும் இல்லாததால் செவிலியர்கள் கர்ப்பிணி பெண்ணுக்கு சுகப்பிரசவம் பார்த்த போது குழந்தையின் தலை துண்டான நிலையில், குழந்தையின் உடல்பகுதி தாயின் வயிற்றில் சிக்கிக் கொண்டது. 

phs

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று இரவு பிரசவத்திற்காக பொம்மி என்ற பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சூழ்நிலையில் மருத்துவர் இல்லாத காரணத்தால் செவிலியர்களே பொம்மிக்கு பிரசவம் பார்த்துள்ளனர். சுகப்பிரசவத்தின் போது குழந்தையை வெளியே எடுக்கும்போது தலை துண்டாகியது. குழந்தையின் உடல்பகுதி தாயின் வயிற்றில் சிக்கிக் கொண்டது. 

தாய்க்கு தீவிர சிகிச்சை 

குழந்தையின் உடல் பகுதியை மீட்க பொம்மி செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இறந்த குழந்தையின் உடல் பகுதி பொம்மியின் வயிற்றில் இருந்து போராடி மீட்கப்பட்டது. பிரசவத்தின் போது பாதிக்கப்பட்ட பொம்மிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

30 கிராம மக்கள் வந்து செல்லும் சுகாதார நிலையத்தில் இரவில் மருத்துவர்கள் எவரும் இல்லை என்று புகார் கூறப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் யாரும் இல்லாத நிலையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.