சீருடையுடன் பெண் காவலர் செய்த ‘சேட்டை’…! கோவையில் மேலும் ஒரு அதிர்ச்சி..

 

சீருடையுடன் பெண் காவலர் செய்த ‘சேட்டை’…! கோவையில் மேலும் ஒரு அதிர்ச்சி..

சில மாதங்களுக்கு முன்பு ,திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெண் காவலர் ஒருவர் சீருடையுடன்,காதலனோடு சேர்ந்து மது அருந்துகிற காட்சி…வீடியோவாக வெளியாகி அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஞாபகத்தில் இருக்கிறதா? அதேபோல் போல் ஒரு சம்பவம் கோவையில் அரங்கேறியிருக்கிறது!

சில மாதங்களுக்கு முன்பு ,திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெண் காவலர் ஒருவர் சீருடையுடன்,காதலனோடு சேர்ந்து மது அருந்துகிற காட்சி…வீடியோவாக வெளியாகி அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஞாபகத்தில் இருக்கிறதா? அதேபோல் போல் ஒரு சம்பவம் கோவையில் அரங்கேறியிருக்கிறது!

பெண் காவலர் ஒருவர்,தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.இது குறித்து நடந்த விசாரணையில்…அந்த பெண் காவலர்,
கோவை சோமனூர் காவல் நிலையத்தில் பணி செய்வது தெரிய வந்திருக்கிறது!

அந்த பெண் காவலரை,உடனடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.அந்த வீடியோவில் இருக்கும் பேக்ரவுண்ட்  காட்சிகளைப் பார்த்த பலரும் ,காவல் நிலையத்துக்குள்ளயே  இப்படி ஒரு காரியத்தைப்  பண்ணலாமா  என்று கொந்தளித்தார்கள்.

அப்புறம்தான் தெரிய வந்திருக்கிறது…பெண் காவலரும் அவரது காதலரும் இருந்த இடம்,ஒரு ட்ராவல் நிறுவனத்தின் அலுவலகம் என்பது! ஏற்கனவே பொள்ளாச்சியை சுழட்டியடிக்கும் பாலியல் விவகாரம் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து கோவை மாவட்டத்து ஆட்கள் இன்னும் மீளவில்லை! அப்படியிருக்கும் நிலையில் இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது!

சம்பந்தப்பட்ட பெண் காவலர் ,தனது காதலருடன் இருந்த இடம் காவல்  நிலையமாக இல்லாவிட்டாலும்,காவலர் சீருடையுடன் அவர் இப்படி நடந்து கொண்டதால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.