சீரியல் நடிகையை மருமகனுடன் தொடர்புப்படுத்தி அவதூறு: கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட நடிகை!
சிலர் எடுத்து அவரது மருமகனுடன் தொடர்புப்படுத்தி இணையத்தில் அவதூறு பரப்பியுள்ளனர்.
நடன கலைஞரும், மலையாள திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருபவர் தாரா கல்யாண். இவரது மகள் சௌபாக்யாவுக்கும் அர்ஜுன் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைச் சிலர் எடுத்து அவரது மருமகனுடன் தொடர்புப்படுத்தி இணையத்தில் அவதூறு பரப்பியுள்ளனர்.
இந்நிலையில் இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘எனது மகளின் திருமணத்தை குருவாயூரப்பனின் துணையுடன் நடத்தினேன். திருமணத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வைத்து ஸ்மூகவலைதளங்களில் அவதூறு பரப்பியுள்ளனர்.
இதை செய்தவர்களுக்கு இதயம் இருக்கிறதா? இல்லை அதற்கு பதில் கல் தான் இருக்கிறதா? இதை நான் மன்னிக்கவே மாட்டேன். இதனால் எத்தனை பேர் மனம் பாதிக்கப்படும். இதை லைக் செய்தவர்கள், கமெண்ட் செய்தவர்கள் என அனைவரையும் நான் வெறுக்கிறேன். பெண்களை மதிக்க கற்று கொள்ளுங்கள்’ என்றார்.