சீரியல் நடிகைகளை ஆபாசமாக திட்டிய இயக்குநர் மீது போலீசில் புகார்!

 

சீரியல் நடிகைகளை ஆபாசமாக திட்டிய இயக்குநர்  மீது போலீசில் புகார்!

புகாரின் அடிப்படையில் நீராவி பாண்டியனை போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர்

சீரியல் நடிகைகளை ஆபாசமாக பேசியதாக சீரியல் இயக்குநர்  மீது போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

TTN

சென்னை வானகரத்தில் நடைபெற்ற  சீரியல் ஒன்றின் படப்பிடிப்பின் போது  துணை நடிகைகளை இயக்குநர் நீராவி பாண்டியன் சரியாக நடிக்கவில்லை என்று கூறி ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் துணை நடிகைகள் சிலர் திருவேற்காடு காவல்நிலையத்தில் நீராவி பாண்டியன் மீது புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நீராவி பாண்டியனை போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். 

TTN

இதையடுத்து இயக்குநர் நீராவி பாண்டியன் துணை நடிகைகளிடம் மன்னிப்பு கேட்டார். இதனால் சமாதானம் ஆன நடிகைகள் வழக்கை வாபஸ் பெற்று அங்கிருந்து கிளம்பினர். இயக்குநர் நீராவி பாண்டியன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி என்ற பிரபல டிவி சீரியலை இயக்கி வருவது  குறிப்பிடத்தக்கது