சீரமைப்பு பணிகள் முடியவில்லை… வேதாரண்யத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

 

சீரமைப்பு பணிகள் முடியவில்லை… வேதாரண்யத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் மறு சீரமைப்பு பணிகள் இன்னும் முடிவடையாததால் வேதாரண்யத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்: கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் மறு சீரமைப்பு பணிகள் இன்னும் முடிவடையாததால் வேதாரண்யத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் கடந்த 16-ம் தேதி நாகை – வேதாரண்யம் இடையெ கரையை கடந்தது. இதனால் வேதாரண்யம் வரலாறு காணாத சேதத்தை சந்தித்துள்ளது. மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து செய்வதறியாது அகதிகளாக இருந்து வருகின்றனர். ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால் அங்கு இருக்கும் பள்ளிகள் அனைத்தும் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் மீட்பு பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால் வேதாரண்யம் கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.