சீரடி சாயிபாபாவின் பளிங்கு சிலையிலுள்ள ரகசியம்!?

 

சீரடி சாயிபாபாவின் பளிங்கு சிலையிலுள்ள ரகசியம்!?

1918- ம் வருடம் விஜயதசமி அன்று, சீரடி சாயிபாபா மஹாசமாதியடைந்தார். அவரது உடல்  வாதாவில், முரளி கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக அமைக்கப்பட்ட மேடையில் அடக்கம் செய்யப்பட்டது.

சீரடி சாயிபாபா 1918- ம் வருடம் விஜயதசமி அன்று, மஹாசமாதியடைந்தார். அவரது உடல்  வாதாவில், முரளி கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக அமைக்கப்பட்ட மேடையில் அடக்கம் செய்யப்பட்டது. பாபாவின் சமாதிக்கு முன்பு, அவரது பெரிய புகைப்படம் ஒன்றை வைத்து, நான்கு கால ஆரத்தியுடன் நித்திய பூஜைகளும்  நடந்து வந்தன. தொடர்ந்து அவரது சமாதியில் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும், பாபாவின் படத்தோடு ஊர்வலங்களும், அன்ன தானங்களும் விமரிசையாக நடந்தன.

baba

முப்பத்தாறு வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துத்தான் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது ஒரு நாள் இத்தாலியிலிருந்து அருமையான, உயர்ந்த வகை வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. அது அப்பொழுது எதற்கு வந்தது, ஏன் வந்தது என்று யாருக்கும் தெரியாது. அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். 

baba

இந்த விஷயம்,  சீரடி சாயி சமஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரியவர அதை ஏலத்தில் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  சாயிபாபா சிலை செய்வதற்காக ஏலம் எடுக்கப்படுவதை அறிந்து, பலரும் ஏலத்திலிருந்து விலகினார்கள். இதையடுத்து சாயி சமஸ்தான் அதிகாரிகள் அந்த கல்லை ஏலத்தில் எடுத்து அதைப் பம்பாயில் உள்ள பாலாஜி வஸந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் கொடுத்து பாபாவின் சிலையை செய்யச் சொன்னார்கள். அதனுடன் சிலை  சீரடி செய்ய பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படமும்  கொடுக்கப்பட்டது. 

baba

ஆனால்  அந்த புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி சிலை செய்வதில் மிகுந்த சிரமப்பட்டார். அன்றிரவு சிற்பியின் கனவில் தோன்றிய பாபா, தனது முகத்தைத் தெளிவாகவும் பல வித கோணங்களிலும் காண்பித்தார். இதனால்  ஆச்சரியப்பட்ட அந்த சிற்பி , தெளிவு பெற்று மிகவும் சிறப்பான முறையில் சிலையை வடித்துக் கொடுத்தார். பாபாவின் விருப்பப்படி உருவான இந்த சிலையானது 1954-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7-ம் தேதி பாபாவின் சமாதிக்கு முன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிலையைத் தான்  சீரடியில் இன்றளவும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வழிபட்டு  வருகின்றனர்.

shradi

என் பூத உடல் சமாதியில் இருந்து பேசும். எனது பக்தன் எவ்வளவு தூரத்திலிருந்தாலும், என்னிடமிருந்து மூவாயிரம் மைல்களுக்கப்பால் இருந்த போதும், காலில் நூல் கட்டியுள்ள சிட்டுக்குருவி இழுக்கப்படுவதைப்போன்று அவன் ஷீர்டிக்கு இழுக்கப்படுவான் என்பது பாபாவின் வாக்கு. புண்ணியத்தலமான சீரடிக்கு செல்லுங்கள்,  பாபாவின் அருளைப் பெறுங்கள்!

இதையும் வாசிக்க: இந்துக்களாக பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக சென்று தரிசனம் செய்ய வேண்டிய கோவில் இது…