சீமை கருவேல கன்று கொடுத்தால் காசு வழங்கப்படும்!

 

சீமை கருவேல கன்று கொடுத்தால் காசு வழங்கப்படும்!

ஊருக்குள் இருக்கும் சீமை கருவேல மரக்கன்றுகளை பிடுங்கிவந்துக் கொடுத்தால் 3 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என புதுக்கோட்டையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஊருக்குள் இருக்கும் சீமை கருவேல மரக்கன்றுகளை பிடுங்கிவந்துக் கொடுத்தால் 3 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என புதுக்கோட்டையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவியது. இதனால் விவசாயம் மட்டுமின்றி குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதியுற்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

seemai karuvelam maram

இதனை இப்படியே பாதுகாக்க புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் சேர்ந்த இளைஞர் அமைப்பினர், ஊருக்குள் இருக்கும் சீம கருவேல கன்றை கொண்டுவந்து கொடுத்தால் 3 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தனர். இதையடுத்து அப்பகுதி இளைஞர்களும், பள்ளி மாணவர்களும் கண்ணில் படும் சீம கருவேல கன்றுகளையெல்லாம் கொண்டுவந்துக்கொடுத்து காசை வாங்கி செல்கின்றனர்.  இப்படி வாங்கப்படும் கன்றுகளை ஒட்டுமொத்தமாக தீவைத்து எரித்து விடுவோம் என இளைஞர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.