சீமான் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல… மீண்டும் மோதும் சீமான் – ராகவா லாரன்ஸ்

 

சீமான் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல… மீண்டும் மோதும் சீமான் – ராகவா லாரன்ஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று  நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்தது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று  நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்தது.  

ttn

விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகரும் இயக்குநருமான  ராகவா லாரன்ஸ்,  ‘தான் அரசியலுக்கு வருவேன் என்று என் தலைவன் சொன்ன போது  கூட ஒவ்வொரு  அரசியல் கட்சி தலைவரிடம் என்ன பிடிக்கும் என்பதை சுட்டிக்காட்டி புகழ்ந்திருந்தார். குறிப்பாக  மு.க.ஸ்டாலின் தொடங்கி எனக்கு அவர் பெயர் சொல்ல பிடிக்கல(சீமான்) அவர் வரை அனைவரையும் புகழ்ந்துள்ளார்’ என்றார். 

ttn

 
தொடர்ந்து பேசிய அவர், முரசொலியில் ரஜினியை குறித்து தவறாக எழுதினார்கள். அதற்கு முக ஸ்டாலின் மன்னிப்பு கேட்டார். அதற்காக அவர் பயந்து  விட்டார் என்று பொருளல்ல.  அவர் தலைவர் மீது   மரியாதை வைத்துள்ளார். நான் இந்த மேடையில் இப்படி பேசினத்துக்கு தலைவர் என்கிட்ட பேசலனாலும் பரவாயில்ல. ஆனா ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். சீமான் பேச்சு  நாட்டுக்கு நல்லதல்ல’ என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.