சீமான் திருந்தாவிட்டால் மக்கள் அவரை திருத்துவர்: போட்டுத்தாக்கிய புதுச்செரி முதல்வர்…

 

சீமான் திருந்தாவிட்டால் மக்கள் அவரை திருத்துவர்: போட்டுத்தாக்கிய புதுச்செரி முதல்வர்…

புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகரில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்காக, கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.

புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகரில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்காக, கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் கந்தசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதில் பேசிய சீமான், ராகுல் காந்தி அமைதிப்படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்தார். அதனால், என் இன மக்களுக்கு எதிரான ராஜீவ்காந்தியை தமிழ் மண்ணிலேயே கொன்று குவித்தது வரலாறு என்று என்று காங்கிரஸுக்கு எதிராகப் பேசினார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். 

Seeman

இன்று, காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் ஜான்குமாரை ஆதரித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வாக்கு சேகரித்தார்.

Narayanasamy

அப்போது சீமான் குறித்துப் பேசிய நாராயணசாமி, ராஜீவ்காந்தியின் மறைவைக் கொச்சைப் படுத்திப் பேசுபவர் அரசியல்வாதியாக இருப்பதற்குத் தகுதியற்றவர் என்றும் அவர் ஒரு தரம் குறைந்த அரசியல்வாதி என்றும் சீமான் அவரை அவரே திருத்திக் கொள்ளவில்லை என்றால் மக்களே அவரைத் திருத்துவார்கள் என்றும் சீமானை கண்டித்து பேசியுள்ளார்.