சீமான் உன் தலைவனா என்று கேட்டு அடி… இலங்கையில் சினிமா இயக்குநருக்கு நேர்ந்த கொடூரம்!

 

சீமான் உன் தலைவனா என்று கேட்டு அடி… இலங்கையில் சினிமா இயக்குநருக்கு நேர்ந்த கொடூரம்!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ் திரைப்பட இயக்குநர் களஞ்சியத்தை இலங்கை ராணுவத்தினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து களஞ்சியம் கூறுகையில், “அரசியல் தலைவர்கள் எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்கள் தினத்தன்று ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். நான் ஒரு மாற்றத்துக்காக இலங்கை செல்ல திட்டமிட்டு சென்றேன். யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு என்னுடைய அறைக்கு திரும்பியபோது, ராணுவ வீரர்கள் வந்து மிரட்டினார்கள். 

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ் திரைப்பட இயக்குநர் களஞ்சியத்தை இலங்கை ராணுவத்தினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து களஞ்சியம் கூறுகையில், “அரசியல் தலைவர்கள் எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்கள் தினத்தன்று ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். நான் ஒரு மாற்றத்துக்காக இலங்கை செல்ல திட்டமிட்டு சென்றேன். யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு என்னுடைய அறைக்கு திரும்பியபோது, ராணுவ வீரர்கள் வந்து மிரட்டினார்கள். 

kalanjiyam

வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் கூட இங்கு இருப்பது நல்லதல்ல, இந்தியா புறப்படுங்கள் என்றார். நானும் அதை ஏற்று இந்தியா செல்வதற்காக பலாலி விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு செல்ல தயாரானேன்.
திரிகோணமலை விமானநிலையத்தில் என்னை மட்டும் தனியாக இறக்கி விசாரணை நடத்தினர். என்னை ஒரு சிறைக் கைதியை விட மோசமாக நடத்தினார்கள். அப்போது, ராணுவ வீரர்கள் சுற்றிலும் நின்று என்னிடம் கேள்விகளால் துளைத்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வேல்முருகன், சீமானுடன் இருந்த படத்தைக் காட்டி நீ என்ன விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிர்கொடுக்க வந்தாயா, நீ என்ன சீமானின் கட்சியா? யார் உன்னுடைய தலைவன்? சீமான்தான் உன் தலைவனா… என்று கேட்டார். அதற்கு நான் எனக்கு தலைவன் என்று யாரும் இல்லை என்று கூறினேன்

kalanjiyam

. அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் இருந்து ஒருவர் துப்பாக்கியால் என்னைத் தாக்கினார். இதில் என் எழுத்து எலும்பு, பல் உடைந்தது. ஐந்து மணி நேரம் விடாமல் அடித்தார்கள்.
பின்னர் சிறு விமானத்தில் ஏற்றி எங்கோ கொண்டு சென்றார்கள். செல்லும் வழியில் கொன்றுவிடுவார்களோ என்று அச்சம் ஏற்பட்டது. ஆனால், என்னைக் கொழும்பு கொண்டு சென்று விமானத்தில் ஏற்றினார்கள். அவ்வளவுதான் தெரியும்… இங்கே எப்படி வந்து சேர்ந்தேன், மருத்துவமனையில் எப்படி அனுமதிக்கப்பட்டேன் என்ற நினைவே இல்லை.

kalanjiyam

இலங்கையில் சுற்றுலா சென்ற இந்திய பிரஜை தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்தியத் தூதரகத்தில் புகார் அளித்து பிரச்னையை பெரிதாக்க முடியும், ஆனால் அப்படி செய்தால், இலங்கையில் என்னை நிகழ்ச்சிக்கு அழைத்த பலரும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் புகார் அளிக்கவில்லை” என்றார்.