சீமானை ஏன் ஆதரிக்க வேண்டும்: பாரதிராஜா வெளியிட்ட வீடியோ?!

 

சீமானை ஏன் ஆதரிக்க வேண்டும்: பாரதிராஜா வெளியிட்ட வீடியோ?!

என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா, பல்வேறு விஷயங்களை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். ஒரு தமிழ் தேசிய குடிமகனாக உங்களிடம் ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக பாரதிராஜா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். சீமான் பெயரை கடைசி வரை குறிப்பிடாமல், அவரது சின்னத்தின் பெயரை சொல்லி வாக்களிக்கும்படி கேட்டிருக்கிறார்.

zzvb

அதில் அவர், என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா, பல்வேறு விஷயங்களை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். ஒரு தமிழ் தேசிய குடிமகனாக உங்களிடம் ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். என் தமிழ் மக்கள், தமிழ் மண், தமிழ் தாய் மிகவும் பெருந்தன்மை கொண்டவள். பசி என்று வந்தவர்களுக்கு உணவளிப்பாள், ஒண்ட இடமில்லாமல் வருபவர்களுக்கு இடமளிப்பாள், தன் சொந்த பிள்ளைக்கு பால் கொடுத்த மார்பிலேயே ஒண்ட வந்த பிள்ளைகளுக்கும் பால் கொடுப்பாள். ஆனால் அவளின் மார்பறுத்து வஞ்சிக்கும் செயல் நடந்து வருகிறது.

நம் மண்வளம், கனிமவளம், நீர்வளம் என அத்தனை மீது ஆதிக்க சக்தி போர் தொடுக்கிறது. இந்த மண்ணை ஆண்டவர்களில் தன்னை தமிழனாகவே மாற்றிக்கொண்டவர் எம்.ஜி.ஆர் மட்டும்தான். அன்புக்கு மூன்றெழுத்து, பாசத்துக்கு மூன்றெழுத்து, தமிழுக்கு மூன்றெழுத்து, எம்.ஜி.ஆர் மூன்றெழுத்து என்று சொல்லக் கூடியவர். எங்களை பொறுத்தவரை அவர் தமிழர், வேற்று மாநிலத்தவர் அல்ல, நீங்களும் அதுபோல் விஸ்வாசமாக இருங்கள், நாங்கள் உங்களை தூக்கி கொண்டாடுகிறோம். ஆனால் தமிழுக்கு விடியலாக பிறந்திருக்கிறது ஒரு விடிவெள்ளி, ஒரு சின்ன தீப்பொறி. எத்தனையோ செய்கிறோம், தலைமை பொறுப்பை ஒரு தமிழனுக்கு கொடு என்று கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. 

ddv

விடிவெள்ளியாக வந்திருக்கிறான், தெளிவும் அறிவும் தன்மானமும் விவேகமும் இருந்தால் புரிந்துகொள் அவன் யார் என்பதை. ஒரே ஒருத்தன் உப்பு போட்டு திங்கிறான், தனித்து நிக்குறான், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மல்யுத்தம் பண்ண பிறந்திருக்கான். பூமியை காக்க, மக்களை காக்க, மொழியை காக்க, கலாச்சாரத்தை காக்க ஒரு விவசாயி, விவசாய குடிமகன். அவன் இருந்தா, மக்களுக்கு போராடுவான், விவசாயத்துக்கு போராடுவான், நல்லவேளை தெரிஞ்சோ தெரியாமாலோ அந்த சின்ன பையனுக்கு விவசாயி சின்னம் கொடுத்திருக்கான். அதக்கூட அழிச்சுட்டு காட்டுறிங்களே, இது என்ன நியாயம். யாருக்கும் பயப்படாம நிக்கிறான் அந்த புறநானூற்று தமிழன், அவன் கைய கால கட்டிப்போட்டுட்டு அவன்கூட யுத்தம் பண்றிங்களே, எவ்வளவு அவமானம்.

zvzfzf

கைக்கட்டை கழட்டிவிடு, கால் கட்டை கழட்டிவிடு, சமமாக சண்டையிட்டு பார், அதைவிட்டுட்டு கட்டிப்போட்டு ஜெயிச்சேன்னு சொல்லக்கூடாது. மக்களே பாரதிராஜா அரசியல்வாதி அல்ல, ஆனால் உண்மையை உரக்க சொல்லுவேன். நான் நினைத்திருந்தால் இந்த பூமியில் எந்த பதவிக்கும் வந்திருக்கலாம், எனக்கு பதவி மீது ஆசையில்லை. ஆனால் யார் பதவிக்கு வரவேண்டும் என்று காட்ட எனக்கு தகுதி உண்டு. அதில் ஒரு தமிழன் இருக்கிறான், இனப்பற்று, மொழிப்பற்று இருந்தால் அவனை அடையாளம் கண்டுகொள், ஓட்டுபோடும் விரலால் அவனை அவனுக்கு அடையாளம் காட்டு என பதிவு செய்துள்ளார்.

இதையும் வாசிங்க

சுட்டுக் கொல்லப்படும் இளைஞர்கள்; டெல்லியில் சைக்கோ கொலைகாரன் நடமாட்டம்?!..