சீப்ப ஒளிச்சி வச்சிட்டா… கல்யாணம் நின்னுடுமா? இந்து என்ற அடையாளமே வேண்டாங்க- கமல் அதிரடி!

 

சீப்ப ஒளிச்சி வச்சிட்டா… கல்யாணம் நின்னுடுமா? இந்து என்ற அடையாளமே வேண்டாங்க- கமல் அதிரடி!

மத்திய மாநில அரசுகள் சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறார் என்ற ஒரு அறிக்கை ஒன்றை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மத்திய மாநில அரசுகள் சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறார் என்ற ஒரு அறிக்கை ஒன்றை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், “சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறார் மத்திய மாநில அரசுகள், மக்கள் எடுத்துவிட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது, ஆழ்வார்களோ, நாயன்மார்களோ இந்து என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை, முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தவர்களாலே இந்து என நாமகரணம் செய்யப்பட்டோம்  ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழி மொழித்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும்பொழுது மாற்றன் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாகக் கொள்வது எத்தகைய அறியாமை…

d

நாம் இந்தியர் என்கின்ற அடையாளம் சமீபத்தியதுதான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது, நாம் நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகு, புரியலன்ற சோமாரிகளுக்கு…..

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம்…  கோடின்ன உடனே பணம் ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல… அரசியல்வாதி அல்ல… வெறும் வியாதி!! தமிழா நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள்….”என குறிப்பிட்டுள்ளார்.