சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது

 

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது.

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் வேகமாக கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அந்நாட்டில் மட்டுமில்லாமல் உலக நாடுகள் சிலவற்றிலும் இந்த வைரஸ் தலைகாட்ட தொடங்கியுள்ளது. சீனாவில் இருந்து செல்பவர்கள் மூலமாக மற்ற நாடுகளுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதனால் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் வவ்வால்களை அதிகமாக உண்ணும் சீன கட்டுவிரியன் பாம்புகள் மூலம் கொரோனா வைரஸ் காய்ச்சல் உருவானதாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

ttn

இந்நிலையில், இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிப்படைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காய்ச்சல் காரணமாக சீனாவில் உள்ளோர் முகமூடி அணிந்தே வெளியில் வருகிறார்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் குறித்தே மக்களிடையே பேச்சு எழுந்துள்ளது. மேலும் அச்சத்துடனே அங்குள்ள மக்கள் நாட்களை கடத்தி வருகின்றனர். இதனால் சீனாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நோய் பரவாமல் தடுக்கும் வகையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.