சீனாவில் கொரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,158 ஆக உயர்ந்தது!

 

சீனாவில் கொரோனா வைரஸுக்கு  பலியானோர் எண்ணிக்கை 3,158 ஆக உயர்ந்தது!

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியுள்ளது

உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கும் ஒன்றாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. குறிப்பாக ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. இதன் காரணமாகச் சீனாவிலிருந்து வரும் பயணிகள், திருப்பி சீனாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் இந்தியாவுக்கும் வந்துவிட்டது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். 

 

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியுள்ளது. இருப்பினும் பலி  எண்ணிக்கை மட்டும் குறைந்த பாடில்லை. 

 

இந்நிலையில்,  சீனாவில் கொரோனா வைரஸுக்கு மேலும் 22 பேர் பலியாகியுள்ளனர். இதனால்  பலியானவர்களின் எண்ணிக்கை 3,158  ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,778 ஆக உயர்ந்துள்ளது.