சீனாவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 2943-ஆக உயர்வு

 

சீனாவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 2943-ஆக உயர்வு

கொரோனா வைரஸ் காய்ச்சலால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2943-ஆக உயர்ந்துள்ளது.

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் காய்ச்சலால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2943-ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே சென்றது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது பெருமளவு குறைய தொடங்கியுள்ளது.

ttn

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2943-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 31 பேர் உயிரிழந்து உள்ளனர். அத்துடன் புதிதாக 125 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.