சீனாவில் கட்டுக்குள் வந்த கொரோனா: நேற்று பாதிப்பும் இல்லை; உயிரிழப்பும் இல்லை!

 

சீனாவில் கட்டுக்குள் வந்த கொரோனா: நேற்று பாதிப்பும் இல்லை; உயிரிழப்பும் இல்லை!

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரேசில், இந்தியா என பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிக்கின்றனர். 

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது.  இதனால் உலகம் முழுவதும் 857,487 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 
42,107 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரேசில், இந்தியா என பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிக்கின்றனர். 

tt

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததால் மக்கள் மீண்டும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

ttn

அந்த வகையில் சீனாவில் நேற்று கொரோனாவுக்கு புதிதாக யாரும் பாதிக்கப்படவுமில்லை,  உயிரிழக்கவுமில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அங்கு 3,305 பேர் உயிரிழந்த நிலையில் 76 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.