சீட்பெல்ட் போடலனா இப்படி தான் நடக்கும்! அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ

 

சீட்பெல்ட் போடலனா இப்படி தான் நடக்கும்! அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ

நாட்டில் போக்குவரத்துக்கு விதிகளை மக்கள் பெரும்பாலும் மதிப்பதில்லை. ஹெல்மெட் அணியாமல் செல்வது, சிக்னலில் நிற்காமல் செல்வது என்பது போல சொல்லிக்கொண்டே போகலாம். காரில் பயணிப்போர் பலர் சீட்பெல்ட் எதற்கு கொடுத்திருக்கிறார்கள் என்பதைத் தெரியாமலேயே உள்ளனர்.

நாட்டில் போக்குவரத்துக்கு விதிகளை மக்கள் பெரும்பாலும் மதிப்பதில்லை. ஹெல்மெட் அணியாமல் செல்வது, சிக்னலில் நிற்காமல் செல்வது என்பது போல சொல்லிக்கொண்டே போகலாம். காரில் பயணிப்போர் பலர் சீட்பெல்ட் எதற்கு கொடுத்திருக்கிறார்கள் என்பதைத் தெரியாமலேயே உள்ளனர். போக்குவரத்து விதிகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் பெரும்பாலோனோர் பின்பற்றுவதில்லை.

traffic-rules

சமீபத்தில் ட்விட்டரில் ஒரு வீடியோ வைரலாகியது. அந்த வீடியோவில் சீட்பெல்ட் அணிவது ஒருவரின் உயிரை எப்படி பாதுகாக்கும் என்று விளக்கியிருந்தனர்.
அதோடு சீட்பெல்டின் முக்கியத்துவத்தை மிக அருமையாக பதிவு செய்திருந்தனர்.

மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் உ.பி. காவல்துறையின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் ஸ்ரீவாஸ்தவ் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், சீட்பெல்ட் அணிந்திருந்தவர் மற்றும் அணியாதவருக்கு விபத்து ஏற்பட்டால் என்ன நடக்கும் என்று செய்து காண்பித்திருந்தனர். போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்ட டீவீட்டில் “நமது அன்றாட வாழ்க்கையில்  சீட்பெல்ட் எவ்வளவு தவிர்க்க முடியாதது என்பதை உணர்த்த வலுப்படுத்தும் ஒரு ஆர்ப்பாட்டம்!”  என்று பதிவிட்டிருந்தார்.