சிவன் பாடல்களை பாடி அசத்தும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்!

 

சிவன் பாடல்களை பாடி அசத்தும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்!

காவலர் பணியில் ஏற்படும் மன  அழுத்தத்தைக் குறைக்கவே ஓய்வு நேரங்களில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர்  வெங்கடாசலம் இதுபோன்ற பாடல்களைப் பாடுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரி: காவலர் ஒருவர் ஓய்வு நேரத்தில் சிவன் பாடல்களைப் பாடி அசத்தியுள்ள வீடியோ காட்சி வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர்  காவல் நிலையத்தில்  சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் வெங்கடாசலம். சிவன் பக்தரான இவர் சிவபெருமானின் பக்தி பாடல்களைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

police

இந்நிலையில் கணீர் என்ற குரல்வளம் கொண்ட வெங்கடாசலத்தின் பாடலை  சக காவலர் ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து அதை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காவலர் பணியில் ஏற்படும் மன  அழுத்தத்தைக் குறைக்கவே ஓய்வு நேரங்களில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர்  வெங்கடாசலம் இதுபோன்ற பாடல்களைப் பாடுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

police

காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் பணி  அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொள்வது சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்  வெங்கடாசலத்தின் இந்த முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.