சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் தாலி இருப்பதால் பாதிப்பு ஆண்களுக்கா ?பெண்களுக்கா? -பக்தர்கள் பரிதவிப்பு ..

 

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் தாலி இருப்பதால் பாதிப்பு ஆண்களுக்கா ?பெண்களுக்கா? -பக்தர்கள் பரிதவிப்பு ..

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் பகுதியில் ஒரு மிகவும் சக்தி வாய்ந்த கோவில் உள்ளது .இந்த சுப்ரமணிய சாமி கோவிலில் ஒரு ‘சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டி’ உள்ளது .இந்த உத்தரவு பெட்டியில் ஏதாவது ஒரு பொருளிருந்தால் அது சம்பந்தமாக நாட்டில் ஒரு நிகழ்வு நடக்குமாம் .காலம்காலமாக இப்படி பல சம்பவங்கள் நடந்து வந்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர் .

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் பகுதியில் ஒரு மிகவும் சக்தி வாய்ந்த கோவில் உள்ளது .இந்த சுப்ரமணிய சாமி கோவிலில் ஒரு ‘சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டி’ உள்ளது .இந்த உத்தரவு பெட்டியில் ஏதாவது ஒரு பொருளிருந்தால் அது சம்பந்தமாக நாட்டில் ஒரு நிகழ்வு நடக்குமாம் .காலம்காலமாக இப்படி பல சம்பவங்கள் நடந்து வந்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர் .

sivanmalai

ஒரு சமயம் அந்த உத்தரவு பெட்டியில் தண்ணீர் இருந்ததாம் அப்போது நாட்டில் சுனாமி வந்ததாம் .ஒரு சமயம் துப்பாக்கி தோட்டா இருந்ததாம் அப்போது கார்கில் போர் நடந்ததாம் .இப்படி பக்தர்கள் கனவில் தோன்றி கடவுள் சொல்லும் பொருளை வைத்து பூஜை செய்தால் இப்படி அது சம்பந்தமாக ஏதாவது நாட்டில் நடக்கும் என்பது ஐதீகம் என்று அந்த ஊர் பெரியவர்கள் கூறுகிறார்கள் .

sivanmalai

2019 ம் ஆண்டு அக்டோபர் மாசம் உத்தரவு பெட்டியில் மஹாலஷ்மி சிலை வைத்து பூஜை செய்தபோது ,தமிழ்நாட்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் அதிகமான பேர் வெற்றிபெற்று அதிகாரத்தை கைப்பற்றினார்கள் .
இப்போது உத்தரவு பெட்டியில் தாலிக்கயிறு வைத்து பூஜை செய்கிறார்கள் .அதனால் என்ன நடக்குமோ என்று  பக்தர்கள் பரிதவிப்போடு இருக்கிறார்கள் .சிலர் தாலி இருப்பதால் கல்யாணமான ஆண்களுக்கு ஏதாவது பாதிப்பு வருமா?அல்லது கல்யாணமான பெண்களுக்கு ஏதாவது பாதிப்பு வருமா ?என்று பரிதவிப்போடு இருக்கிறார்கள் .