சிவனோ, பாம்போ உங்களை காப்பாற்றது! ஈஷா யோகா மையத்தில் ஜெபம் செய்யும் கிறிஸ்துவ பாதிரியார்!! வைரலாகும் வீடியோ

 

சிவனோ, பாம்போ உங்களை காப்பாற்றது! ஈஷா யோகா மையத்தில் ஜெபம் செய்யும் கிறிஸ்துவ பாதிரியார்!! வைரலாகும் வீடியோ

கோவையில் உள்ள ஈஷா யோகா தியான மையத்தில் ஆதியோகி சிலை முன்பு கிறிஸ்தவ பாதிரியார் ஜெபசிங் என்பவர் மதப்பிரச்சாரம் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது, 

கோவையில் உள்ள ஈஷா யோகா தியான மையத்தில் ஆதியோகி சிலை முன்பு கிறிஸ்தவ பாதிரியார் ஜெபசிங் என்பவர் மதப்பிரச்சாரம் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது, 

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோசி சிலை மிகவும் பிரபலமானது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த ஈஷா யோகா மையத்திற்கு வந்து செல்கின்றனர். சிவராத்திரியன்று இங்கு நடத்தப்படும் சிறப்பு சிவராத்திரி பூஜையில் உலகம் முழுவதுமிலிருந்து வரும் பிரபலங்கள் மற்றும் பக்தர்கள்  பிரம்மாண்ட ஆதியோகி சிலை முன்பு தியானம் செய்வது வழக்கம். 

இந்நிலையில் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ஜெபசிங் என்ற கிறிஸ்தவ பாதிரியார் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்து ஆதியோகியின் சிலை முன்பு கூடியிருந்த மக்களிடையே யோகாவோ, யோகியோ, பாம்போ, சிலையோ ஒருபோதும் மனிதர்களை ரட்சிக்காது.  இந்த சிலையும் இந்த பாம்பும் ஒருபோதும் உங்களை காப்பாற்றாது. இயேசுதான் உங்களுக்காக ரத்தம் சிந்தியிருக்கிறார் என மதப்பிரச்சாரம் செய்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதையடுத்து ஜெபசிங் கைது செய்யப்பட்டுள்ளார்.