சிவகார்த்திகேயனுக்கு நோ சொன்ன பிரபல முன்னணி நடிகை! ஏன் தெரியுமா?
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள SK 17 படத்திலிருந்து நடிகை ராஷ்மிகா விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள SK 17 படத்திலிருந்து நடிகை ராஷ்மிகா விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படம் படு தோல்வியைத் தழுவியுள்ளது. இதைத்தொடர்ந்து இரண்டு முதல் மூன்று படங்களை வரை கைவசம் வைத்துள்ள இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளார்.
அதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த கீதா கோவிந்தம் படம் மூலம் பிரபலமான ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்கவிருந்தார். ஆனால் அவர் தற்போது இந்த படத்திலிருந்து திடீரென்று விளக்கியுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் இவர் ஏன் திடீரென்று விலகினார்? என்று ஒரு கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது. இது குறித்து நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது தான் உண்மையான காரணம் குறித்து தெரியவந்துள்ளது. அது என்னவென்றால் இவர் சிவகார்த்திகேயன் படம் மட்டுமின்றி சமீபத்தில் மகேஷ்பாபு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஒரே சமயத்தில் இரு படங்களுக்குத் தேதி ஒதுக்குவதில் சிரமனான சூழல் ஏற்பட்டதால், தான் சிவகார்த்திகேயன் படத்திலிருந்து ரஷ்மிக்காஅதிரடியாக வலகிவிட்டாராம். அது மட்டுமின்றி சிவகார்த்திகேயன் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமையவில்லை என்பதால் தான் ராஷ்மிகா இப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.