சிவகார்த்திகேயனின் எஸ்.கே.15 படப்பிடிப்பு எப்போனு தெரியுமா?
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் எஸ்.கே. 15 படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் எஸ்.கே. 15 படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மக்கள் மனதை வென்ற நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து திரைப்படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். ‘சீமராஜா’ படத்தை தொடர்ந்து இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.அதைத் தொடர்ந்து பாதியில் நிற்கும் ரவிக்குமாரின் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட படத்தை சிவகார்த்திகேயன் விரைவில் முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படம் அவரின் 15வது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாம் பாதியில் துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இது அரசியல் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகுவதாகப் பேசப்பட்டுவருகிறது.