சிவகார்த்திகேயனால் கைவிடப்பட்டதா விஜய் தேவரகொண்டாவின் ஹீரோ படம்? 

 

சிவகார்த்திகேயனால் கைவிடப்பட்டதா விஜய் தேவரகொண்டாவின் ஹீரோ படம்? 

விஜய் தேவரகொண்டாவின் ஹீரோ திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஹைதராபாத்:  விஜய் தேவரகொண்டாவின் ஹீரோ திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அர்ஜுன் ரெட்டி படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா- ஷாலினி பாண்டே இணைந்து நடித்து வந்த படம் ஹீரோ. மற்றொரு கதாநாயகியாக நடிகை மாளவிகா மோகன் நடித்து வந்தார். ஆனந்த் அண்ணாமலை இயக்கி வந்த இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  இயக்கி வந்தார். டெல்லியில்  நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு 15 கோடி வரை செலவு செய்யப்பட்ட நிலையில் திடிரென படம் கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

அது ஏனென்றால் 20 சதவீத படத்தின் படப்பிடிப்பைப் பார்த்த படக்குழுவினர், படம் திருப்பித்தராதல் படத்தை கைவிடமுடிவு செய்துள்ளார்களாம் .

vijay devarakonda

ஆனால் இதை கேட்ட ரசிகர்கள் ஏற்கனவே சிவகார்த்திகேயன் படத்திற்கு ஹீரோ டைட்டில் சுட்டியதால் தான் விஜய் தேவரகொண்டா படம் பின் வாங்கியுள்ளதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.