சிவகாசி சிறுமி கொலை : அசாம் மாநில இளைஞர் சிக்கியது எப்படி..குற்றவாளியின் வாக்குமூலம்!

 

சிவகாசி சிறுமி கொலை : அசாம் மாநில இளைஞர் சிக்கியது எப்படி..குற்றவாளியின் வாக்குமூலம்!

அங்குச் சென்ற போலீசார் கிருத்திகாவை அரைநிர்வாணமாக கண்டெடுத்தனர். அப்போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்களாபுரம் என்னும் பகுதியில் வசித்து வரும் சுந்தரம் என்பவரின் மகள் கிருத்திகா. இவருக்கு வயது 8. சில நாட்களுக்கு முன்னர் கிருத்திகா விளையாடச் சென்ற பிறகு வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமியின் உடல் முட்புதரில் கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அங்குச் சென்ற போலீசார் கிருத்திகாவை அரைநிர்வாணமாக கண்டெடுத்தனர். அப்போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. 

ttn

சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் அப்பகுதியில் வசித்து வந்த அசாம் மாநிலத்தவர்கள் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், மோஜம் அலி என்பவர் தான் குற்றவாளி என்பது அம்பலமாகி நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், மோஜம் அலியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் சிவகாசியில் உள்ள துணிப்பை கடையில் வேலை பார்த்து வந்ததாகவும் அண்மையில் அங்கு பெயிண்ட் அடிப்பதற்காகச் சிறுமியின் தந்தை அங்கு வந்ததாகவும் அப்போது மோஜம் அலி உள்ளிட்டோர்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். 

tttn

சிறுமி காணாமல் போன அன்று மோஜம் அலி விடுப்பில் சென்றதும், மறுநாள் காலை வரை தங்கியிருந்த இடத்திற்குத் திரும்ப வராததும் சந்தேகத்தை ஏற்படுத்தியதாலே அவரிடம் காவல்துறையினரை விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, மோஜம் அலி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 6-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.