சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை : வடமாநிலத்தவர்கள் உள்ளிட்ட 6 பேரிடம் விசாரணை !

 

சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை : வடமாநிலத்தவர்கள் உள்ளிட்ட 6 பேரிடம் விசாரணை !

நேற்று காலை சிறுமியின் உடல் முட்புதரில் கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அங்குச் சென்ற போலீசார் கிருத்திகாவை அரைநிர்வாணமாக கண்டெடுத்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்களாபுரம் என்னும் பகுதியில் வசித்து வரும் சுந்தரம் என்பவருக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த சிறுமியின் பெயர் கிருத்திகா. இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கமாகத் தனது நண்பர்களுடன் கிருத்திகா விளையாடச் செல்வாராம். அதே போல, நேற்று முன்தினமும் விளையாட சென்றதாக கூறப்படுகிறது . ஆனால், வெகு நேரம் ஆகியும் கிருத்திகா வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

ttn

அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் கிருத்திகாவைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை சிறுமியின் உடல் முட்புதரில் கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அங்குச் சென்ற போலீசார் கிருத்திகாவை அரைநிர்வாணமாக கண்டெடுத்தனர். அப்போது கிருத்திகா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சிறுமி கொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக அசாம் மாநிலத்திலிருந்து வந்து கொங்களாபுரத்தில் வசிக்கும் 3 பேரிடமும், அதே பகுதியைச் சேர்ந்த 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.