சிவகாசியில் 1100 பட்டாசு ஆலைகள் நாளை ஒருநாள் செயல்படாது என அறிவிப்பு

 

சிவகாசியில் 1100 பட்டாசு ஆலைகள் நாளை ஒருநாள் செயல்படாது என அறிவிப்பு

சிவகாசி பகுதியில் உள்ள 1100 பட்டாசு ஆலைகளும் நாளை ஒரு நாள் செயல்படாது என தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

சிவகாசி: சிவகாசி பகுதியில் உள்ள 1100 பட்டாசு ஆலைகளும் நாளை ஒரு நாள் செயல்படாது என தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தினால் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார். மேலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ttn

கொரோனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளதை தொடர்ந்து சிவகாசி பகுதியில் உள்ள 1100 பட்டாசு ஆலைகளும் நாளை ஒரு நாள் செயல்படாது என தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.