சில்லரை பிரச்னை இளம் பெண்ணை தாக்கிய ஊபர் ஆட்டோர் ஓட்டுநர்!

 

சில்லரை பிரச்னை இளம் பெண்ணை தாக்கிய ஊபர் ஆட்டோர் ஓட்டுநர்!

சென்னையில் சில்லரை பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை தாக்கியதாக ஊபர் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்துள்ளனர்.  

சென்னையில் சில்லரை பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை தாக்கியதாக ஊபர் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்துள்ளனர்.  




சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் மோனிஷா. தனது தம்பியுடன் வீட்டிலிருந்து உபர் ஆட்டோ புக் செய்து தேனாம்பேட்டை சென்றுள்ளார். புரசைவாக்கம் நெடுஞ்சாலை பகுதியில் ஆட்டோ வரும்போது சில்லறைப் பிரச்சினை தொடர்பாக மோனிஷாவின் சகோதரருக்கும் ஆட்டோ ஓட்டுநர் ஜோதி என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Auto Driver

ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த இருவரையுமே இறங்கச் சொல்லி ஆட்டோ ஓட்டுனர் ஜோதி தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆட்டோ ஓட்டுநர் மோனிஷாவையும், அவரது தம்பியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மோனிஷா வேப்பேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் ஜோதியை  கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.