சில்மிஷம் செய்த யூடியூப் பிரபலம்: ட்விட்டரில் கிழித்து தொங்கவிட்ட சின்மயி!

 

சில்மிஷம் செய்த யூடியூப் பிரபலம்: ட்விட்டரில் கிழித்து தொங்கவிட்ட சின்மயி!

பிரபல யூடியூப் விமர்சகர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பன ட்வீட்களை பகிர்ந்துள்ளார்.

சென்னை: பிரபல யூடியூப் விமர்சகர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பன ட்வீட்களை பகிர்ந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் மனதில்பட்டதை வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர் பாடகி சின்மயி. பல சர்ச்சைகளை சந்தித்தாலும், சலிக்காமல் பதிலடி கொடுப்பவர். தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகம் இருப்பதாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பேசிய போது பாடகி சின்மயி தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்தும், யூடியூப் விமர்சகர் பிரஷாந்த் குறித்தும் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பான அவரது ட்வீட்களில், பெண்களை தவறான மனநிலையில் தொட்டு பேசுவது, அணைப்பது போன்றவை பார்க்க சாதாரணமாக தெரிந்தாலும், அது மனதளவில் பயத்தை ஏற்படுத்தும். எனக்கு 8 வயது இருக்கும்போது என் அம்மாவுட ரெக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு சென்றேன். அங்கு நான் தூங்கிக் கொண்டிருக்கையில் யாரோ என்னை தொடுவது போல் உணர்ந்து என் அம்மாவிடம் கூறினேன். அதேபோல், 11 வயதில் கச்சேரி ஒன்றுக்கு சென்றபோது வயதான முதியவர் ஒருவர் என் தொடையை கிள்ளிக் கொண்டே இருந்தார் என சின்மயி கூறியுள்ளார்.

மேலும்,  இந்நிலையில், பிரபல யூடியூப் விமர்சகர் பிரஷாந்த் என்பவர், தனக்கு ஆதரவாக பேசுவது போல் நடித்து தன்னை டார்லிங்/ஸ்வீட் ஹார்ட் என்றெல்லாம் அட்வாண்டேஜ் எடுத்துக் கொண்டதையடுத்து, பிரஷாந்தின் உண்மை முகத்தை ட்விட்டரில் பாடகி சின்மயி அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்த யூடியூபரின் பாலியல் தொல்லைக்கு ஆளான ஒரு பெண், அவர்களது உரையாடலை எனக்கு அனுப்பியுள்ளார். அவரது பெயரை வெளியிடாமல் பிரஷாந்தின் லீலைகளை வெளிக் கொண்டு வருவதாகவும் சின்மயி தெரிவித்துள்ளார். இந்த விவரகாரம் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதனிடையே, இது குறித்து பதிலளித்துள்ள யூடியூப் விமர்சகர் பிரஷாந்த், அப்படி நான் தொல்லை கொடுத்திருந்தால் போலீஸில் புகார் செய்திருக்கலாமே. சனிக்கிழமை இப்படி செய்யுறது தப்பு ஆமா. உங்களுக்கு எதிரா எதுவும் இல்ல.. 96 படத்தில் உங்க பணி அருமை. என ட்வீட் செய்துள்ளார்.