சிலை கடத்தல் விவகாரம்; தொழிலதிபர் ரன்வீர் ஷா தோழி கிரண் ராவுக்கும் லுக் அவுட் நோட்டீஸ்

 

சிலை கடத்தல் விவகாரம்; தொழிலதிபர் ரன்வீர் ஷா தோழி கிரண் ராவுக்கும் லுக் அவுட் நோட்டீஸ்

சிலை கடத்தல் விவகாரத்தில் சிக்கியிருக்கும் தொழிலதிபர் ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை: சிலை கடத்தல் விவகாரத்தில் சிக்கியிருக்கும் தொழிலதிபர் ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு கடத்தப்பட்ட பழங்கால சிலைகளை மீட்பதில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையில் பெரும் தொழிலதிபர்கள் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். அந்த வகையில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் சைதாப்பேட்டை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 60 சிலைகள் மீட்கப்பட்டன.

மேலும், அவரது பண்ணை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் பல சிலைகள் சிக்கின. அதுமட்டுமின்றி அவரது தோழியான கிரண் ராவ் வீட்டிலும் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் பிரிவு நடத்திய சோதனையில் மேற்கொண்டு சிலைகள் சிக்கின. இதனையடுத்து ரன்வீர் ஷா வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடுக்கும் பொருட்டு அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் ரன்வீர் ஷாவின் தோழியான கிரண் ராவ் வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக அவருக்கு எதிராகவும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.