சிலை கடத்தல் வழக்கு: பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

 

சிலை கடத்தல் வழக்கு: பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது

சென்னை: சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் நடந்த சிலை கடத்தல் தொடர்பான அனைத்து  வழக்குகளையும் விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதனையடுத்து, சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன்,  சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.