சிலை கடத்தல் புலனாய்வு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு ஹெச்.ராஜா வாழ்த்து!

 

சிலை கடத்தல் புலனாய்வு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு ஹெச்.ராஜா வாழ்த்து!

இன்று ஓய்வு பெறும் நிலையில் இருந்து ஓராண்டு பதவி நீட்டிப்பு பெற்றுள்ள ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை: இன்று ஓய்வு பெறும் நிலையில் இருந்து ஓராண்டு பதவி நீட்டிப்பு பெற்றுள்ள ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சிலைகடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு புலனாய்வு அதிகாரியாக பணியாற்றி வந்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், இன்றுடன் ஓய்வு பெறுவதாக இருந்தது.

ஆனால், பொன். மாணிக்கவேலின் பதவி காலத்தை ஓராண்டு நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை உத்தரவு பிறப்பித்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தன் ட்விட்டரில் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று ஓய்வு பெறும் நிலையில் இருந்த ஐ ஜி பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு சிலை கடத்தல் பிரிவு சிறப்பு புலனாய்வு அதிகாரியாக ஓராண்டு பதவி நீட்டிப்பு சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி அளிக்கின்ற விஷயம்.வரவேற்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.