சிலை கடத்தலில் காவல்துறைக்கு தொடர்புள்ளது: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

 

சிலை கடத்தலில் காவல்துறைக்கு தொடர்புள்ளது: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

சிலை கடத்தலில் காவல்துறை உயரதிகாரிகளுக்கு தொடர்புள்ளது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை: சிலை கடத்தலில் காவல்துறை உயரதிகாரிகளுக்கு தொடர்புள்ளது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஊழல்வாதிகள் கோயில் சொத்துக்களை திருடி இருக்கிறார்கள். மக்கள் பணத்தை, கோயிலுக்கு சொந்தமான பணத்தை ஊழல்வாதிகள் எடுத்து இருக்கிறார்கள். அவர்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்கள்தான் தற்போது போய் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக புகார் அளிக்கிறார்கள். அவர்கள் அச்சத்தால் போலீசில் புகார் அளிக்கின்றனர். 

சிலை கடத்தலில் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். இந்த ஊழல் அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இதற்காக நான் போராட வேண்டிய அவசியம் வந்துவிடும் என்று நினைக்கிறேன் என்றார்,