சிலைகள் தயாராக இருக்கு… விரைவில் ராமர் கோயில்… களமிறங்கிய பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா!

 

சிலைகள் தயாராக இருக்கு… விரைவில் ராமர் கோயில்… களமிறங்கிய பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா!

இன்று பலத்த எதிர்பார்ப்புக்கிடையே அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாஜகவின் தேசிய செயலர் ஹெச்.ராஜா. செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறுகையில்,  பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கு முடிவுக்கு வந்திருப்பது திருப்தி அளிப்பதாகவும், உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை ஏற்று அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்றும் கூறினார்.

இன்று பலத்த எதிர்பார்ப்புக்கிடையே அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாஜகவின் தேசிய செயலர் ஹெச்.ராஜா. செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறுகையில்,  பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கு முடிவுக்கு வந்திருப்பது திருப்தி அளிப்பதாகவும், உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை ஏற்று அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்றும் கூறினார்.

h raja

மேலும் இந்த தீர்ப்பின் மூலம் இந்திய அரசியல் அமைப்பு சட்டமே வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்த ஹெச்.ராஜா, ராம ஜென்ம பூமிக்காக போராட்டங்கள் நடத்தி உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திக் கொள்வதாகவும், அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்காக தூண்கள், சிற்பங்கள் ஆகிய அனைத்தும் ஏற்கெனவே தயாராக இருப்பதால் அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.