சிறையில் ரவுடியுடன் பெண் டாக்டர் கள்ளக் காதல்… திமுக முன்னாள் அமைச்சரை கொலை செய்தவனின் லீலை..!

 

சிறையில் ரவுடியுடன் பெண் டாக்டர் கள்ளக் காதல்… திமுக முன்னாள் அமைச்சரை கொலை செய்தவனின் லீலை..!

திமுக முன்னாள் அமைச்சரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் ரவுடி, பெண் டாக்டரை காதல் வீழ்த்திய கதைதான் புழல் சிறை முழுவதும் ஒரே ஹாட் டாபிக்.

திமுக முன்னாள் அமைச்சரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் ரவுடி, பெண் டாக்டரை காதல் வீழ்த்திய கதைதான் புழல் சிறை முழுவதும் ஒரே ஹாட் டாபிக். 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த  திமுக., முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கடந்த  2004ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  கல்லூரி நடத்தும் போட்டியில் கொலை செய்யப்பட்டார் அவர். அதன் பிறகு அவரது மகளுக்கு சீட் கொடுத்து அவர் திமுக அமைச்சரவையில் வைத்து அழகு பார்க்கப்பட்டதெல்லாம் தனிக்கதை. ​​Love

ஆலடி அருணாவை கொலை செய்யத்தூண்டியது  கல்வித்தந்தை ராஜா.  இந்த வழக்கில்  சிக்கியவர்களில் முக்கியமானவர் மதுரையைச் சேர்ந்த ரவுடி  அழகர்.  இவருக்கு  முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பிறகு  ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. பாளையங்கோட்டை சிறையில் கம்பி எண்ணி வந்த அழகர் சிறைக்குள்ளும் வாலாட்ட, எதிரிகள் சிறைக்குள்ளும் முளைத்தனர். இதனால், ‘தனது உயிருக்கு ஆபத்து’’ என அழகர் அலற  சென்னை, புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். சமீபகாலமாக சிறைக்குள் இருக்கும் மருத்துவமனைக்கு, உடம்பு சரியில்லை என அடிக்கடி போய் வந்திருக்கிறார்.

 ​​Love

அவரது நேக்குப்போக்கு சந்தேகத்தை கிளப்பவே  சிறை அதிகாரிகள் சந்தேகப்பட்டு விசாரித்திருக்கிறார்கள்.  அப்போது தான் அந்த அதிர்ச்சி தகவல் கோடை வெயிலாய் சிறை அதிகாரிகளின் தலையை பஸ்பமாக்கி இருக்கிறது. சிறை மருத்துவமனையில் பணியாற்றும்  பெண் டாக்டர் ஒருவரை காதல் வலையில் வீழ்த்தியது தெரியவந்துள்ளது. ​​Love

அடுத்து ரவுடி அழகரை பற்றி பெண் டாக்டரிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் ரவுடியுடனான காதலில் படு ஸ்ட்ராங்காக இருக்கிறாராம்.  இதில் வேடிக்கை என்னவென்றால்  இருவருக்குமே திருமணமாகி குடும்பம் குட்டிகள் இருக்கிறது. அப்ப இது கள்ளக்காதல் தானே… காதல் கண்ணைத்தான் மறைக்கும்… கள்ளக்காதல் உலகத்தையே மறக்கடிக்க செய்து விடுமே… சிறை அதிகாரிகளையும் தாண்டி தங்களுக்குள்ளான கள்ளக்காதலை ரவுடியுடன் வளர்த்து வருகிறார் பெண் மருத்துவர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் எத்தனையோ பேர் சிறைக்குள் இருக்க, சிறைக்குள்ளே கள்ளக்காதால்… விளங்கிடும் புழல் சிறை…!