சிறையில் இருக்கும் பிரபல நடிகர்: புகார் கொடுத்த பெண்ணுக்கு கத்தி குத்து; அதிர்ச்சி தரும் சம்பவம்!?

 

டிவி நடிகர் மீது புகார் கொடுத்த இளம்பெண்ணை இருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை: டிவி நடிகர் மீது புகார் கொடுத்த இளம்பெண்ணை இருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

karan

மும்பையைச் சேர்ந்த டிவி  நடிகர் கரண் ஓபராய்.  தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து வரும் இவர் மீது பெண் ஒருவர் மும்பை ஓஷிவாரா பகுதி காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் கூறினார். அதில்,  கரண் ஓபராய்திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டி வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.புகாரின் அடிப்படையில் நடிகர் கரண் ஓபராய் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

kaarn

இந்நிலையில் நடிகர் கரண் மீது புகார் கூறிய பெண்  நேற்று முன்தினம் ஒசிவாரா ஜாக்கர்ஸ் பார்க் பகுதியில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த இருவர் அந்த பெண்ணின் இடது தோள்பட்டையில்  கத்தியால் குத்தியுள்ளனர். மேலும் அந்த பெண் மீது ஒரு பேப்பரையும் தூக்கி வீசியுள்ளனர். அதில் நடிகர் கரண் ஓபராய் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்குமாறு எழுதியிருந்தது. 

இதுகுறித்து அந்த பெண் மீண்டும் ஒசிவாரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.