சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த அதிமுக உறுப்பினர் சரமாரியாக வெட்டிக் கொலை!

 

சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த அதிமுக உறுப்பினர் சரமாரியாக வெட்டிக் கொலை!

கடந்த ஆண்டு அப்பகுதியில் தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில், தகராறில் ஈடுபட்ட மகனை வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுக்கோட்டை அருகே உள்ள களமாவூரில் வசித்து வருபவர் மூர்த்தி. இவர் அப்பகுதியின் முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர். கடந்த ஆண்டு அப்பகுதியில் தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில், தகராறில் ஈடுபட்ட மகனை வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைத் தண்டனை அனுபவித்து வந்த மூர்த்தி சில நாட்களுக்கு முன்னர் பிணையில் வெளியே வந்தார். 

ttn

இந்நிலையில், இன்று காலை மூர்த்தி திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மூன்று வாகனங்களில் வந்த 6 பேர் டீக்கடையிலேயே மூர்த்தியை சரமாரியாக வெட்டினர். அதனால், ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் மூர்த்தியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடந்த ஆண்டு மூர்த்தி கொலை செய்த நபரின் நண்பர்களோ அல்லது உறவினர்களோ பழி வாங்கும் நோக்கோடு தான் மூர்த்தியைக் கொலை செய்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மூர்த்தியைக் கொலை செய்தவர்களைத் தேடி வருகின்றனர்.