சிறுவர் பூங்காவில் அத்துமீறிய ஜோடிகள்: பெற்றோரிடம் போட்டு கொடுத்த காவல்துறை!

 

சிறுவர் பூங்காவில் அத்துமீறிய ஜோடிகள்: பெற்றோரிடம் போட்டு கொடுத்த காவல்துறை!

சிறுவர் பூங்காவில் எல்லை மீறிய காதலர்களை காவல் துறையினர் கண்டித்து அனுப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை : சிறுவர் பூங்காவில் எல்லை மீறிய காதலர்களை காவல் துறையினர் கண்டித்து அனுப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ராஜாஜி சிறுவர் பூங்காவில் காதல் ஜோடியினர் வரம்பு மீறுகின்றனர் என்றும் இதனால் குழந்தைகளுடன் பூங்காவுக்கு செல்ல முடியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது போன்ற  தொடர் புகார்களையடுத்து, நேற்று திடீரென பூங்காவிற்கு சென்று காவல் துறையினர் பார்வையிட்டனர்.

பொதுமக்கள் கணிசமாக கூடும் அப்பூங்காவில் சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரும், பொழுதைப் போக்கிய வண்ணம்  இருந்தபோது, இடையூறாக இருந்த சுமார் 20ற்கும் மேற்பட்ட காதல் ஜோடிகளைக்  காவல்துறையினர் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்களது பெற்றோர்களை வரவழைத்து, அறிவுரை கூறியும், இது போன்ற தவறுகள் இனி நடைபெறக்கூடாது என கண்டித்தும் அவர்களை அனுப்பி வைத்தது  குறிப்பிடத்தக்கது.