சிறுவன் மீது ஏறி சென்ற கார்.. காயமின்றி உயிர்பிழைத்த அதிசயம்! – வைரல் வீடியோ

 

சிறுவன் மீது ஏறி சென்ற கார்.. காயமின்றி உயிர்பிழைத்த அதிசயம்! – வைரல் வீடியோ

கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவன் மீது பெண் ஒருவர் காரை ஏற்றிச்சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை: கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவன் மீது பெண் ஒருவர் காரை ஏற்றிச்சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாடி கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு சிறுவன் மட்டும் தன் காலில் அணிந்திருந்த ஷூவின் லேஸை கீழே குனிந்து கட்டுகிறான்.

அப்போது அச்சிறுவனை கவனிக்காத பெண் ஒருவர், தன் காரை வேகமாக இயக்குகிறார். அது சிறுவன் மீது ஏறிச் சென்றுவிடுகிறது. கார் ஏறுவதை சற்றும் எதிர்பாராத அச்சிறுவன், உடனடியாக தரையில் படுத்து தன்னைத்தானே காத்துக் கொள்கிறான். அடுத்த விநாடியே எழுந்து ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இது காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. 

தொடக்கத்தில் காண்போருக்கு பதைபதைப்பை ஏற்படுத்தும் அந்த வீடியோ, அடுத்த சில விநாடிகளில் நிம்மதி பெருமூச்சு விட வைக்கிறது. தற்போது அந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.